states

img

பேரிடர் நிவாரண நிதி எங்கே?

சிம்லா கனமழை வெள்ளத்தால் கடுமை யாக பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு பேரிடர் நிவாரணத்துக்காக சிறப்பு நிதியுதவியை ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை என அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங் குற்றம் சாட்டியுள்ளார்.'

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகை யில்,”பேரிடர் பாதித்த பாஜக ஆளும் மாநி லங்களுக்கு ஒன்றிய அரசால் சிறப்பு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இமாச்சலப் பிரதேச மாநிலத்தி ற்கு இதுவரை பேரிடர் நிவாரண நிதி  வழங்கப்படவில்லை. ஒன்றிய அமைச்ச ரவையில் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் (ஜே.பி.நட்டா) இருக்கி றார். அவர் தான் பாஜகவின் தேசியத் தலைவரும் கூட. அவர் இமாச்சலத்தின் கோரிக்கைகளுக்காக போராட வேண் டும். ஆனால் இமாச்சலப் பிரதேச மாநிலத் திற்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுடன் ஒன்றிய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது” என அவர் கூறினார்.

கேரள அரசின் வழியில்...

நிலச்சரிவால் உருக்குலைந்த கேரளா வின் வயநாட்டிற்கு ஒன்றிய அரசு இது வரை பேரிடர் நிவாரண நிதியை வழங்க வில்லை. ஆனால் ஹெலிகாப்டர் சேவை கட்டணத்தை (ரூ.153 கோடி) மட்டும் ஒன்றிய அரசு பறித்துக்கொண்டது. ஒன்றிய அரசின் இந்த பாரபட்ச நிலைபாட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி அர சாங்கம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது. தற்போது கேரளத்தைப் போல மேகவெடிப்பு கனமழையால் உருக்குலைந்த இமாச்சலப்பிரதேசத்தை ஆளும் காங்கிரஸ் அரசும் பேரிடர் நிவாரண நிதி வழங்காததற்கு மோடி அர சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.